Monday 20 July 2015

நிகழ்வு 4 "சிறுகதைச் சிறுவிழா"


குவிகம் இலக்கியவாசல் நான்காம் நிகழ்வு "சிறுகதை சிறுவிழா"'
சென்னை -ஆழ்வார்பேட்டை ஸ்ரீநிவாச காந்தி நிலையத்தில்
18.07.2015 அன்று மாலை நடந்தது .தமிழ்த்தாய் வாழ்த்துடன் மாலை 6.15 மணிக்கு நிகழ்ச்சி துவங்கியது .அனைவரையும் வரவேற்ற






திரு.கிருபானந்தன்  நடுவர்களை மேடைக்கு அழைத்தார்
.



நவீன விருட்சம் என்னும் காலண்டு இதழை கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக மிகுந்த முனைப்புடன்  வெளியிட்டு வருபவரும், கணையாழி குறுநாவல் போட்டிகளில் பரிசுகளும் பாராட்டுகளும்  பெற்றவரும், விருட்சம் இலக்கிய சந்திப்பு என்னும் நிகழ்ச்சியின் அமைப்பளர்களில் ஒருவரும், பல முன்னணி எழுத்தாளர்களின் இனிய நண்பருமான  -  திரு அழகிய சிங்கர் அவர்கள்,

புகைப்படக் கலைஞரும், சிறுகதை, கவிதை தொகுப்புகள், வானொலி நிகழ்ச்சிகள் தவிர இந்திரா பார்த்தசாரதி, பிரபஞ்சன் உள்ளிட்ட இலக்கிய ஆளுமைகளை பேட்டிகள் கண்டு புகைப்படங்களுடன் அளித்தவரும், ஓவியர் கோபுலு, ஓவியர் நடனம் ஆகியோருடன் நெருங்கிப் பழகியவருமான – திரு, கிளிக் ரவி அவர்கள்,

பத்து சிறுகதை கவிதை தொகுப்புகள் தவிர அரசியல்,  அறிவியல், சுய முன்னேற்றம், ஆன்மிகம், கட்டுரைகள், கதைகள், கவிதைகள், சினிமா, நகைச்சுவை என பலதரப்பட்ட பதிவுகளை வலைப்பூவிலும் சுமார் நான்காயிரம் நண்பர்கள் கொண்ட  முகநூலிலும் எழுதிவருபவரும்  தினமலர் வாரமலர் பகுதியில்  தொடர்ந்து  எழுதிவருபவருமான    திரு KG ஜவர்லால் அவர்கள்.


வருகை தந்து சிறப்பித்த அன்பர்கள்

பதிவு செய்திருந்த 13 எழுத்தாளர்கள் வாசித்த ==>>   கதைச் சுருக்கங்கள் இங்கே

          ஒலி வடிவில் கேட்க  


சுபா சுரேஷ் -  "அனுபவம்" 


திரு. மலைச்சாமி   "ஊமைக்கொலுசுகள்"


கவிஞர் ஆரா  "எதிர்பாராதது"


திரு. குமரி அமுதன் "எழுந்து நில்"


திரு. ஸ்ரீதரன்  "கண்ணாடிக்கதவுக்கு அப்பால்"


திரு. கொற்றவன்  "வீரன் தந்த பரிசு"



திரு ராஜகோபாலன்  "பிரேதத்துடன் ஒரு பயணம்"




திரு. சேது கோபிநாத்  "தவிப்பு"



திரு.  G B சதுர்புஜன்    "நடிகன்"




திரு. சரவணன்   "நிலாவின் பொம்மை" 


திருமதி  R வத்சலா    "மூலை"




திரு. தொல்காப்பியன்    "மேகதூதம்"



திரு J ரகுநாதன் "லாரா"



பரிசு பெற்றோர்







முதல் பரிசு பெறுபவர் திரு J ரகுநாதன்









இரண்டாம் பரிசு பெறுபவர் திரு கொற்றவன்

















மூன்றாம் பரிசு பெற்றவர்கள் திரு
சரவணன் - திரு GB சதுர்புஜன்





மற்ற கதைகள்

முன்னமே பதிவு செய்ய இயலாவிட்டாலும் முனைவர் மாணிக்கம் பிச்சை அவர்களும் தனது கதையினை வாசித்தார்
அமைப்பாளர்கள் ஒருவரான  திரு தர்ம.ராஜேந்திரன் தனது "1974" என்னும் கதையினை வாசித்தளித்தார்



அமைப்பாளர் திரு.சுந்தரராஜன்  அவர்களின் "ஒரு தவறு செய்தால்.." என்னும்  கதையினை  அவரது துணைவியார் திருமதி விஜயலட்சுமி வாசித்தார்.






நடுவர்கள் உரை

நடுவர் ஜவர்லால் பேசுகையில் எல்லோரும் ஈடுபாட்டுடனும்
உற்சாகத்துடனும் பங்குபெற்றது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார். இம்மாதிரியான முயற்சிகளில் பரிசு என்பது ஒரு பொருட்டல்ல என்றார். வேறுபட்ட நிலைகலன் கொண்ட சில கதைகளையும் குறிப்பிட்டு நிகழ்ச்சி நல்ல அனுபவமாக இருந்தது என்றார்.


நடுவர் கிளிக் ரவி தனது எழுத்து அனுபவங்களைக் குறிப்பிட்டுவிட்டு, சரித்திரக்கதை, கிராமக்கதை, வெளிநாட்டுக்கதை என பலகதைகள்
வந்துள்ளதைக் குறிப்பிட்டார். சில கதைகளையும் குறிப்பிட்டார். மேலும் இளைஞர்கள் இலக்கிய ஆர்வம் கொள்ள ஆவன செய்யவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.


நடுவர் அழகியசிங்கர் தமது உரையில் கதைகளில் கருப்பொருளும் தளமும் (அவர் உபயோகித்த சொல் IDEAS) பல தளங்களில் ஆச்சரியமாக இருந்தன என்றார். உதாரணத்திற்காக சில கதைகளையும் குறிப்பட்டார்.ஆனால், நல்ல தளத்திலிருந்த கதைகள் சில சரியாகச் சொல்லப்படவில்லை எனவும் கருத்து தெரிவித்தார்.

 பத்திரிகைகளுக்கு  கதைகள் வருவதில்லை எனவும்  இந்நிகழ்ச்சியில்   இந்த எண்ணிக்கையில் கதைகள் படிக்கப்படும் என்று தமக்கு நம்பிக்கை இல்லை எனவும் அதனை சாதித்த அமைப்பாளர்களை வாழ்த்தி நன்றி கூறினார்.

நிறைவு 


திரு தரும. ராஜேந்திரன்  நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
 நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

ஒரு பின் குறிப்பு :

நிகழ்ச்சிக்கு வந்திருந்த திரு. பிரபஞ்சன் அவர்கள்  . படிக்கப்பட்ட இந்தக் கதைகளைக்  கொண்டு ஒரு  சிறுகதைப் பட்டறை முயற்சி   செய்யலாம்.என்று ஒரு  யோசனை தெரிவித்தார். இது பற்றிய தங்கள் கருத்தை கதை படித்த அன்பர்களும் மற்றவர்களும்   தெரிவிக்கக் கோருகிறோம்.



3 comments:

  1. அருமையான ஒரு நிகழ்வு இது, படிக்கவே சோம்பல் படும் மக்களை கேட்கவாவது கேளுங்கள், காதுகொடுத்துக் கேளுங்கள் .கற்றலின் கேட்டல் நன்று என்று உணரச்செய்ய அரிய முயற்சி இது. எனக்கும் ஒரு வாய்ப்பளித்தால் நானும் என் கதைகளை படித்து ஒலிநாடாவை அனுப்புகிறேன், மூன்று கதைப் புத்தகங்கள் "வெற்றிச் சக்கரம் 53 கதைகள் அடங்கியது , தங்கத்தாமரை 32 கதைகள் அடங்கியது மணிவாசகம் வெளியீட்டாளர்களால் வெளியிடப்பட்டது,

    அன்புடன்
    தமிழ்த்தேனீ rkc1947@gmail.com http://thamizthenee.blogspot.com

    ReplyDelete
  2. நிகழ்ச்சி மிக நன்றாக நடத்தப்பட்டது. இளைஞர்கள் பலர் பங்குபெற்று தங்கள் கதைகளைப் படித்தது உற்சாகம் ஊட்டுகிறது. சிறுகதைப்பட்டறை நல்ல ஆலோசனை. தங்களுடைய தமிழ்ப்பணி தொடர என் வாழ்த்துக்கள்.

    அன்புடன்
    ஜி.பி.சதுர்புஜன்
    kvprgirija@gmail.com

    ReplyDelete