Tuesday 5 July 2016

வலையில் சிக்கும் இலக்கிய மீன்கள்




முன் குறிப்பு :  இணைய தளங்களின் பெயர்களைச் சொடுக்கி அந்தத் தளங்களுக்குச் செல்லலாம்

குவிகம் இலக்கிய வாசலின் 2016 ஜூன் மாத நிகழ்வான "வலையில் சிக்கும் இலக்கிய மீன்கள்" 18 ஆம் தேதி சனிக்கிழமை மாலை எலியட்ஸ் கடற்கரைச்
 சாலையில் அமைந்திருக்கும் 'ஸ்பேசஸ்' அரங்கில் சிறப்பாக நடந்தேறியது.

சுந்தரராஜன் குவிகம் அமைப்பைப்பற்றியும் இந்நிகழ்வின்(வ்) நோக்கம் பற்றியும் கூறி  அனைவரையும் வரவேற்று நிகழ்வை தொடங்கிவைத்தார்

திரு வேணுகோபால் அவர்கள் வாசித்த(வ்) "தர்பன சுந்தரி'  எல்லோரையும் நெகிழச்செய்த கதையாக அமைந்தது
சிந்தாமணியின் கவிதைகள்(வ்) நிகழ்ச்சிக்கு பெருமை சேர்த்தன 

இணையம் பற்றியும் சிற்றலை வானொலிபற்றியும் பல தகவல்களுடன் ஜெய்சக்திவேல் தனது கருத்துக்களைக் கூற கலந்துரையாடல்(வ்) தொடங்கியது.வானொலி பற்றி விரிவாகப் பேசிய இவர் குறிப்பிட்ட தளங்கள்  சர்வ தேச வானொலி  மற்றும் பிராஜக்ட் மதுரை.

தாரிணி கணேஷ் கோமல் சாமிநாதன் சாமிநாதன் அவர்களின்(வ்) இலக்கிய இதழ் "சுபமங்களா"   வெளியிட்ட படைப்புகளை  இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படிருந்ததாகவும்  இப்போது தளம் செயல்படுகிறதா என்று தெரியவில்லை என்று  தெரிவித்தார்

கலந்துரையாடல் நிகழ்வில் பெரும்பாலானோர் கலந்துகொண்டது மிகுந்த நிறைவைத் தந்தது. அச்சடிக்கப்பட்டவையும் இணையத்தில் கிடைப்பவையும் (படிப்பு அனுபவம் வேறுபட்டாலும்)  இரண்டும் தேவையே என்ற கருத்து பரவலாகப் பேசப்பட்டது . முழு விவாதங்களையும் காண   

இறுதியாகப் பேசிய கிருபானந்தன் தன் நன்றி உரையுடன் இலக்கியப் பணியாற்றிவரும் தளங்களில் ஒரு சிலவற்றைக் (பட்டியல் இணைப்பில்) குறிப்பிட்டார். 


நிகழ்வு இனிதே நிறைவுற்றது.

இணைப்பு 

இணைய இதழ்கள் 


 எழுத்தாளர்களின் வலைப்பூக்கள் 


சிறுகதைகள் 


விமர்சன தளங்கள்





No comments:

Post a Comment